Pages

நேசம் நம் சுவாசம் !

Friday, October 15, 2010

எதற்காக 'ப்ளாக்' என்று நினைத்தபோது, மனதுக்குள் ஓர் உதைப்பு. என்ன எழுதப்போகிறாய் என்று கேட்டது? நிகழ்வுகளை,ஒரு காலத்தில் எழுதப்பட்டு பிரசுரமான என் கதைகளை,எழுதப்பட்டும் பிரசுரிக்கபடாத பல படைப்புகளை - இதில் ஏற்றலாமே என்ற எண்ணம் என்றேன். 'சரி' என்றது.
அது மட்டுமில்லை... என் இனிய நண்பர்களும்,புலம் பெயர்ந்த தமிழ் நல்லோர் பலரும் தொடர்ந்து என் படைப்புகளை காண வேண்டும் என கேட்டுக்கொண்டதால் இந்த முயற்சியை தொடங்குகிறேன். இது காலத்தின் கட்டாயமாகி விட்டது.... நேரத்தின் நிர்ப்பந்தமாகி விட்டது.
இந்த மாதிரியான 'ப்ளாக்' விஷயத்தில் எனது முன்னோடியாக திகழும் ஆ.நிவாஸ் ராமமூர்த்தியின் அன்பு கட்டளையை நிறைவேற்றும் எண்ணமே இந்த முயற்சி.
நிகழ்வுகளை பதிவு செய்கையில் மிகுந்த கவனம் தேவை ...எவர் மனதும் புண்படலாகாது என்று எனக்கு கோரிக்கை விடுத்த நார்வே நண்பர் இளங்கோவிற்கு எனது பதில் நேர்மறையானதே! கவலைப்பட வேண்டாம் நண்பரே...
சரி  விஷயத்திற்கு வருவோம்..உங்களையெல்லாம் அதிகம் காக்க வைக்காமல் எனது படைப்பு மிக விரைவில் பதியப்பட இருக்கிறது... உங்களின் அன்பான ஆலோசனைகளையும்  , விமரிசனங்களையும் வேண்டி எழுத தொடங்குகிறேன்.

அன்பன்,
எல்லென்