Pages

நேசம் நம் சுவாசம் !

Sunday, May 22, 2011

                             சின்முத்ரா 



                 தியானத்தின் போது கைகளை இந்த படத்தில் உள்ளது போல் வைத்துக் கொண்டு த்யானிப்பது மிக விசேஷமானது. இதற்கு நாட்டிய  சாஸ்த்ரத்தில்  சின்முத்திரை என்று பெயர்.

                  தனித்தன்மைப் பெற்றிருப்பதாலும் , அதில்லாமல் மற்ற விரல்களின் இயக்கங்கள் ஸ்தம்பித்து விடும் என்பதாலும் கட்டை விரல்  - பரமனைக் குறிக்கிறது.
                  சுட்டிக் காண்பிப்பதின் மூலம் மனித தாத்பர்யத்தை உணர்த்துவதால் , சுட்டு விரல் - ஜீவனைக் குறிக்கிறது.

                  மோதிரம் அணிவதற்காக பிரத்தியேகமாக உள்ள மோதிர விரல் - பொன்னைக் குறிக்கிறது.

                  பாம்பைக் குறித்து , பாம்பு உறையும் இடத்தை உணர்த்தும்  பாம்பு விரல்  - மண்ணைக் குறிக்கிறது.

                  நளினமானதாலும் , மென்மையானதாலும் கடைசியான சிறு விரல்பெண்ணைக் குறிக்கிறது.

                  ‘அதாவது , சுட்டுவிரல் கட்டைவிரலைத் தவிர மற்ற மூன்று விரல்களுடன் இயைந்து அமைந்திருப்பது போல் ஜீவாத்மா எப்போதும் மண், பொன், பெண் ஆகியவற்றில் அமிழ்ந்து உழன்று கொண்டிருக்கிறது. அப்பேர்பட்ட ஜீவாத்மா , பரமாத்மாவை அடைய வேண்டுமானால் அம்மூன்றிலிருந்தும் விலகி வர வேண்டும். பிறகுதான் பரமனை அடைவது சாத்தியம்’ என்கிற அரிய தத்துவத்தை உணர்த்துகிறது இந்த சின்முத்திரை.   

*******************



Saturday, May 14, 2011

முதுமை

அடங்கப்போகும்  மனசுக்குள் 
சாஸ்வத சோகம்
மேகத்திட்டாக வியாபிக்கிறது;
சுவாசத்தின் பிரயத்தனத்தில் கூட 
ஆயாசம் சுதந்திர நடை போடுகிறது;
சாளரத்தின் அரையிருட்டில் 
நிச்சலனமாய் விட்ட 
பழைய பரிணாமக் கோட்பாடு 
ஒற்றைக் காலணியாய் தவம் கிடக்கிறது.
ஏன் 
விடியலுக்கு 
மட்டுமிந்த அர்த்தமுள்ள மோனம்?



_கணையாழி பிப்ரவரி-1983 இதழில் வெளியானது.