Pages

நேசம் நம் சுவாசம் !

Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts

Sunday, July 1, 2012

திருப்திதானே....





அழுவது தெரியப்படாமல் தண்ணீரில் இருந்தேன்...

என்னை தரையில் தூக்கிப் போட்டு

துடிப்பதை ரசித்தாய்...

உயிர் பறக்கும் தருணம் பார்த்து மீண்டும் நீரில் விட்டாய்.....

பிழைத்தபின்,

 மறுபடியும் தரையில் போட்டாய்.....

 துடித்தேன் .....
.
.
.
.
.
.
எனக்கோ உயிர்த்துடிப்பு...

உனக்கோ அதுவும் ஒரு விளையாட்டு....

முகங்கள்...

             வேலையில்லாமல் வெட்டி ஆஃபீசராக ஊரை கிரிவலம் சுற்றிக்கொண்டிருந்த நாட்களில் வரைந்த படம்... இன்றைக்கும் என் அப்பா ”அதெப்படி ஒவ்வோரு முகத்துலயும் உயிர் இருக்கிறா மாதிரி வரஞ்சே..” என்று சிலாகித்துப் பாராட்டும் படம்...  


Sunday, June 10, 2012

காற்று வெளியிடை...

Sunday, October 2, 2011

மஹாத்மா.....நீவிர் வாழ்க!

       ன்று மஹாத்மா காந்திஜியின் ஜன்ம தினம்.....அவருடைய எத்தனையோ கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றினையாவது விடாப்பிடியாய் பிடித்துக் கொண்டு உய்வோமாக.

               இந்த ஓவியம், காந்தீயக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழும் எமது பணி நிறைவுபெற்ற அதிகாரி திரு.மோஹன் தாஸ் அவர்களுக்கு நினவுப் பரிசாக வரைந்து வழங்கப்பட்டது.  



Tuesday, September 13, 2011

ஸ்ரீராம் ஆதித்யா

என் அருமைப் புத்திரன் ஸ்ரீராம் ஆதித்யாவை சமீபத்தில் வரைந்தேன்...பென்சில் ஸ்கெட்ச்தான்....

Saturday, December 25, 2010

ஆடும் அணங்கு

               ந்த டிசம்பர் சீசனுக்கு நம் பங்காக இந்த ஓவியத்தை உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம். இந்த ஓவியம் 1994 =இல் திருவனந்தபுரத்தில் இருந்தபோது வரைந்தது...'இதே போல் நிறைய ஓவியங்கள் வரைந்து கொடுத்தால் நானே என் செலவில் உனக்காக ஒரு ஓவிய கண்காட்சி நடத்துவேன்' என்று உற்சாகப்படுத்திய கேரள சேச்சிக்கு நன்னி!!

Sunday, December 5, 2010

வாழ்க நீ எம்மான்!

ஹே ராம் !
        இந்த படம் 1983-இன் ஜூலை மாத முற்பகுதியில் தொடங்கப்பட்டு , 22-ம் தேதி நிறைவு பெற்றது. தேசப் பிதாவின் உருவம் புள்ளிப் புள்ளியாய் உருப்பெற்றபோது அளவிட முடியாத சந்தோஷம் பெருகியது. எம் பெற்றோரும், நெருங்கியவர்களும் ஸ்லாகித்துப் பாராட்டிய ஓவியம். ஆனால், இந்த ஓவியத்தை இப்போது பார்க்கையில் , மதுவிலக்கு ரத்து, கோடி,கோடியாக லஞ்சம், ஊழல், சாத்வீகத்தை விழுங்கும் வன்முறைகள், விவசாயத்தையும், கிராமங்களையும் புறக்கணித்த நடைமுறை வாழ்க்கை - என்ற எத்தனையோ புள்ளிகளால் 'மஹாத்மாவை ரணப்படுத்துகிறோமோ' என்கிற நடுக்கம் தோன்றுகிறது.
                                             'எல்லாம் மாறுதலுக்குட்பட்டதே'   

Sunday, November 28, 2010

வறுமையின் நிறம் சிவப்பு

பத்மஸ்ரீ கமல்ஹாசன்

Sunday, November 21, 2010

'ரஜினி' காந்தம் !

                              போன சித்திரத்திற்கு நாம் தந்திருந்த கருத்தைப் பார்த்த நம் நண்பர்கள் சிலர் ," என்ன புலம்பல் வேண்டிக் கிடக்கு? ....எங்களுக்கு ஜாலியான 'எல்லென்' தான்  தெரியும்... இந்த டொய்ங்..டொய்ங்..எல்லாத்தையும் மூட்டை கட்டி வெச்சிட்டு ஜாலியா உங்க ஒவியங்கள வெளியிடுங்க" என்று அன்பு கட்டளை இட்டதற்கு இணங்கி, இந்த வாரம் சூப்பர் ஸ்டார்- ன் படம். எமக்கு மிகவும் பிடித்த கிரிம்சன் பிங்க் கலரில்.........                                                                                                                     என்ஜாய்....!  மக்களே !!
இது  எப்டி இருக்கு ?




Tuesday, November 16, 2010

பேசும் பொற்சித்திரங்கள்

             துக்கமும் சோகமும் எமது வாழ்க்கைத் தளத்தில் ஆளுக்கொரு பக்கமாய் இருந்து கொண்டு 'சடுகுடு' ஆடின காலகட்டம் அது (ஏப்ரல் '81). ஆறுதலாய் கிடைத்த நிழல், வயலினில்  சாதகம். அந்த அனுபவத்தை அறிமுகப்படுத்திய அதியற்புத நண்பரின் அண்மையும் , அந்த தருணமும் மனதில் உறைந்து கிடக்கின்றன.
             அப்போது வெளிவந்த 'ராஜபார்வை' படத்தின் ஸ்டில்லை எடுத்து வைத்து வரைந்தபோது ஏற்பட்ட பரவசமும்,நிறைவும் கண்களை பனிக்க வைத்தன.அந்த  படம் கமலுக்கு ஒரு மைல்கல் என்றால் , எமக்கோ  இந்த வரைபடம் நினைவுக்கீறல். வாழ்க வயலின்!
சாஸ்வத சோகம் 

Sunday, November 14, 2010

பேசும் பொற்சித்திரங்கள்


           ந்த பென்சில் ஓவியம் செப்டம்பர் ,80 -ம் வருடம் வரையப்பட்டது . அப்போது நாம் ஹைதராபாதில் இருந்த சித்தி வீட்டிற்கு சென்றிருந்த போது கண்ணில் தென்பட்ட ஜாக்கி ஷெராப் புகைப்படத்தைப் பார்த்து வரைந்தது.  ஏறத்தாழ 30  வயதாகிற இச்சித்திரம்தான்  நம் நினைவுக்கு தெரிந்து பழமையானது!    
பழைய  கம்பீரம்